Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் தாக்கியதில் கண் பார்வையை இழந்த சிறுமி! - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (18:03 IST)

விழுப்புரத்தில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் பள்ளி சிறுமி கண்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக இடியுடன் கூடிய கனமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. அப்போது சுக்கனூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டுக்கு அருகே உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. அதன் விளைவாக அவரது வீட்டில் இருந்து மின்சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளன. அந்த ஒளி தாக்கியதில் அசோக்குமாரின் மகள் சன்மதி கண்பார்வையை இழந்ததாக கூறப்படுகிறது.

 

மின்சாதன பொருட்கள் வெடித்தபோது ஏற்பட்ட ஒளியால் சன்மதி பார்வை மங்க தொடங்கியதாகவும் தொடர்ந்து பார்வை முழுவதுமாக பறிபோனதாகவும் கூறப்படும் நிலையில் அவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கண் பார்வை திரும்ப பெற செய்ய மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments