சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

Siva
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:56 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் ரயில்வே அதிகாரிகளின் ஓய்வறைகள் இருக்கும் பகுதியில் 26 வயதுடைய பெண் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலத்தை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது

இறந்து போன பெண்ணின் அருகில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததாகவும் இதையடுத்து அவரிடம் இருக்கும் பணத்தை பிடுங்க கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது

பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருவர் மாடிக்கு சென்றது எப்படி? காவலர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? கொலை செய்யும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அடுத்த கட்டுரையில்
Show comments