Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளுந்தூர்பேட்டை அருகே பெண் வெட்டிக்கொலை; கள்ளக்காதலன் கைது

Webdunia
திங்கள், 11 மார்ச் 2019 (11:10 IST)
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை வெட்டிக்கொலை செய்த கள்ளக்காதலன்  போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


 
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது சிறுவத்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த பண் கொடிபவுனு(வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருடைய  கணவர் சேகர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் கொடிபவுனு கூலி வேலை செய்து வந்தார்.
 
இந்த நிலையில் கொடிபவுனுவுக்கும், குமாரமங்கலம் காலனியை சேர்ந்த ராமு என்ற  லட்சுமணன்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது.
 
இதனால் ராமு அடிக்கடி கொடிபவுனுடன் ஒன்றாக இருந்து வந்துள்ளார்.
 
இதுபற்றி அறிந்த கொடிபவுனுவின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
 
 இந்த நிலையில் நேற்று முன்தினம் கொடிபவுனு, குமாரமங்கலம் சென்றார். அப்போது அங்கு தேடிவந்த  ராமுவிடம், எனது மகள்கள் பெரியவர்களாகி விட்டனர். எனவே இனிமேல் என்னை தேடி வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமு கொடிபவுனை சரமாரியாக தாக்கியுள்ளாராம்.
 
இந்த நிலையில் கொடிபவுனுவை பார்க்க  நேற்று காலை ராமு சிறுவத்தூர் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமு, கொடிபவுனை அரிவாளால் வெட்டினார். . இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  இந்த சம்பவம் அறிந்த போலீசார் கொடிபவுனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப் பவைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமுவை உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments