Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை முதியோர் இல்லத்தில் சேர்க்க மனு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (10:35 IST)
இந்த நீதிமன்றம் பல விசித்தரமான வழக்குகளை சந்தித்தது உண்டு என பல சினிமாக்களில் நாம் பார்த்ததுண்டு. அதேப்போல் ஒரு விசித்திரமான மனு ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் அளித்துள்ளார்.


 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி 66 வயதான அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்பதே அந்த மனு.
 
சென்னை வடபழனி நேதாஜி தெருவை சேர்ந்த கந்தசாமி, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளார்.
 
அதில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி, போலியான உந்துதலை ஏற்படுத்தி, படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினார்கள். இதனால் சென்னை அசோக் நகரில் உள்ள காசி தியேட்டருக்கு சென்று ரூ.1200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன்.
 
எதிர்பார்ப்பிற்கு மாறாக சரியான மொக்கை படமாக எடுத்து இயக்குனர் ரஞ்சித்தும், ரஜினியும் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். மேலும்ம், 66 வயது சீனியர் சிட்டிசனான ரஜினியை சண்டைக்காட்சிகளில் நடிக்க வைத்து தயாரிப்பாளரும், இயக்குனரும் சித்ரவதை செய்துள்ளனர்.
 
சீனியர் சிட்டிசன்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை அளித்து வரும் நிலையில், தமிழக காவல்துறை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து ரஜினியைக் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் சேர்த்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். என அவர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments