Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புளியந்தோப்பில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக மோதல்: 4 பேர் கைது

Siva
புதன், 12 ஜூன் 2024 (16:31 IST)
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கெட்டுப்போன பிரியாணியை வழங்கியதாக கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஐந்து பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு போலீசார் வலை வீசி உள்ளதாகவும் தெரிகிறது.
 
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இன்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினர் திடீரென பிரியாணியில் இருந்து கெட்டுப் போன வாடை வருவதாக கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
 
இதற்கு கடை ஊழியர்கள் பதில் அளித்த நிலையில் திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் போன் செய்து மேலும் சிலரை வரைவழைத்ததாகவும் அதே போல் கடை ஊழியர்களும் சிலரை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பிரியாணி கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் மற்றும் கடை ஊழியர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளதாகவும் காவல்துறை என தெரிவித்துள்ளனர். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments