Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புளியந்தோப்பில் கெட்டுப்போன பிரியாணி வழங்கியதாக மோதல்: 4 பேர் கைது

Siva
புதன், 12 ஜூன் 2024 (16:31 IST)
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கெட்டுப்போன பிரியாணியை வழங்கியதாக கடைக்காரர்களுடன் வாக்குவாதம் செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஐந்து பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு போலீசார் வலை வீசி உள்ளதாகவும் தெரிகிறது.
 
சென்னை புளியந்தோப்பில் உள்ள ஒரு பிரியாணி கடையில் இன்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினர் திடீரென பிரியாணியில் இருந்து கெட்டுப் போன வாடை வருவதாக கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
 
இதற்கு கடை ஊழியர்கள் பதில் அளித்த நிலையில் திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் போன் செய்து மேலும் சிலரை வரைவழைத்ததாகவும் அதே போல் கடை ஊழியர்களும் சிலரை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பிரியாணி கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிரியாணி சாப்பிட்டவர்கள் மற்றும் கடை ஊழியர்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளதாகவும் காவல்துறை என தெரிவித்துள்ளனர். 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments