கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 28 மாவட்டங்களில் மழை பெய்யும்!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:49 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மட்டக்களப்பு மற்றும் திரிகோணமலை பகுதிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments