Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு பவானி ஆற்றில் மிதந்து வந்த தலை துண்டிக்கப்பட்ட உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (13:59 IST)
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் தலை இல்லாத உடல் ஒன்று மிதந்து வந்துள்ளதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி என்ற பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென  தலை இல்லாத ஒரு உடல் மிதந்து வந்தது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசார்க்கு தகவல் அளித்தனர். போலீசார் தலை இல்லாத அந்த உடலை கைப்பற்றிய நிலையில் அது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வந்து உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பவானி ஆற்றில் கைப்பற்றப்பட்ட தலையில்லாத உடல் கிடைத்துள்ளதை அடுத்து அந்த பகுதியில் காணாமல் போனவர் குறித்த புகார் மனுக்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments