Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை இல்லாததால் மனைவி தற்கொலை; ஏக்கத்தில் கணவனும் தற்கொலை

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (08:19 IST)
குழந்தை இல்லாத சோகத்தில் மனைவி மற்றும் கணவன் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருமே மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் இனியும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்த சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
இதனையடுத்து வீடு திரும்பிய சந்திரன், சுகன்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சுகன்யாவின் பிரிவை தாங்க முடியாத சந்திரன், மனைவி இல்லா உலகத்தில் வாழ முடியாது எனக் கருதி அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 
விஷயமறிந்து வந்த காவல் துறையினர், இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments