முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. ரூ.127 கோடி ஊழல் செய்துள்ளதாக புகார்..!

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (11:17 IST)
ரூபாய் 127 கோடி ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
திமுக அரசு தொடங்கியதிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் சுமத்தப்பட்டு வருகிறது என்பதும் அது குறித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சொத்துக் குறிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக முன்னால் அமைச்சர் காமராஜ் சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. 
 
810 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் 127 கோடி ஊழல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments