Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு.. பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகார்..!

Siva
புதன், 8 மே 2024 (13:34 IST)
ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்தது. இதனை அடுத்து அவர் மீது கஞ்சா வழக்கு பெண் சப் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார் வழக்கு ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரும் அவர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் துறையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சவுக்கு  சங்கர்   சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனு 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments