Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு வைக்கவும், துப்பாக்கியால் சுடவும் தெரியும்: சர்ச்சையாக பேசிய ராணுவ வீரர் மீது வழக்கு

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (13:38 IST)
எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என பாஜக கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருவல்லிக்கேணியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
இதில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ அதிகாரி பாண்டியன் என்பவர் எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும் துப்பாக்கியால் சுடவும் தெரியும் என்றோம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதால் தமிழக அரசே எச்சரிக்கிறேன் என்றும் பேசியிருந்தார்.
 
இதனை அடுத்து ராணுவ அதிகாரி பாண்டியன் மீது திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments