Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டூவீலரை முட்டி தூக்கிய கார்; மதுரையில் கோர விபத்து!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (20:12 IST)
மதுரை வலையங்குளம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்ட டூவிலரை முட்டி தூக்கிய கார்., பரபரப்பு CCTV காட்சிகள் வெளியீடு.


 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையாங்குளம் பகுதியில் மதுரை-தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரா வாகனங்களும்., அதே போல் இப்பகுதியில் சில தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளி பேருந்துகளும் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில்., இன்று காலை சுமார் 11.30 மணியளவில் சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் வந்தவர் நெடுமதுரையை சேர்ந்த  அய்யாவு என்பவரது மகன் அருள்மணி (48) மற்றும் பெருங்குடியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் காசிநாதன் (70) ஆகியோர் சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது எலியார்ப்பத்தி சுங்கச்சாவடியில் இருந்து அதிவேகமாக வந்த ஹூண்டாய் வெர்னா ரக கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும்., சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் காரை ஓட்டி வந்த நபரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில்., தற்போது இந்த விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்., காரை ஓட்டி வந்தவர் ஹூண்டாய் கார் நிறுவனத்தில் பணியாற்றி கார் பழுது பார்க்கும் ஊழியர் என்பதும் பழுது பார்க்க வந்த வாடிக்கையாளரின் காரை எடுத்து வந்ததும் தற்போது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments