Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் ஒரே ஆண்டில் இடிந்து விழுந்த பாலம்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (17:56 IST)
பொதுவாக ஒரு பாலம் கட்டினால் குறைந்தது ஐம்பது வருடங்களுக்கு கியாரண்டி இருக்கும். ஆனால் நெல்லையில் கடந்த ஆண்டு கட்டி முடித்து திறக்கப்பட்ட பாலம் நேற்று இடிந்து விழுந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தளவாய்புரம், ஆவரந்தலை ஆகிய கிராமங்களை இணைக்கும் பாலம் ஒன்று கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ஆனால் நேற்று அடித்த ஒக்கி புயலின் காரணமாக இந்த பாலத்திற்கு கீழ் இருந்த நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் நேற்று திடீரென இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தரம் குறைந்த முறையில், சிமிண்டு உடன் அதிக மண்கொண்டு பாலம் கட்டப்பட்டதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கட்டிமுடிக்கப்பட்டு ஓர் ஆண்டே ஆன நிலையில், பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments