Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ”பர்த்டே பாய்”.. கைது செய்த போலீஸார்

Arun Prasath
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (16:39 IST)
திருவள்ளூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் புன்னம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர், தனது பிறந்தநாளை கொண்டாட, கிராமத்தில் அமைந்துள்ள சாலையின் நடுவே, பட்டாக்கத்தியால் கேக் வெட்டியுள்ளார்.அப்போது அவர்களது நண்பர்களும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் சாலையில் கேக் வெட்டி, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அஜித் குமார், விஜய், உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் சென்னை திருவேற்காடு பகுதியில் திருமண நிகழ்வில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய புது மாப்பிள்ளை புவனேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்