Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 17 ஜூன் 2024 (08:18 IST)
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்திற்கு ஐந்து முறை மிரட்டல் வந்திருப்பதாகவும் வெளி வந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்து வருவதும் வழக்கமாகி கொண்டு இருக்கிறது. 
 
அந்த வகையில் நேற்று இரவு திடீர் என சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் சென்னை விமான இயக்குனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததை அடுத்து நள்ளிரவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டதாகவும் இதனால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
கடந்த இரு வாரங்களில் மட்டும் ஐந்தாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments