Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சாதனை படைக்கும் பிரியாணி!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (15:52 IST)
இந்த உலகில் எத்தனை வகையான சாப்பாடு இருந்தாலும், பிரியாணி என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.

அதிலும் இந்தியாவில் உள்ள முக்கிய விஷயங்களின்போது, திருமணத்தின்போது இந்தப் பிரியாணி சமைப்பது என்பது கெளரவமாகவும் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகள் முதல் இளைஞர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பிரியாணியை ரிசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் 8 ஆம் ஆண்டமாக தொடர்ந்து பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

நடப்பாண்டில் நொடிக்கு 2.5 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 5.5 சிக்கன் பிரியாணிக்கு மத்தியில் ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டை ஒட்டி ஸ்விக்கியில்  4.30 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், 2.49 கோடி பேர் முதல் முறையாக ஆர்டர் செய்தது பிரியாணி என்ற தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments