Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது இளம்பெண்ணை விபச்சாரத்தில் தள்ள முயற்சி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (13:11 IST)
வேலூரில் 16 வயது இளம்பெண்ணை பெண் புரோக்கர் ஒருவர் விபச்சாரத்திற்கு தள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூரில் 16 வயது இளம்பெண் ஒருவரை பெண் ஒருவர் நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்துக் கொண்டிருந்தார், வேறு பாஷையில் ஏதோ பேசியபடி அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்தவாறு சென்றார்.
 
இதனைப்பார்த்த மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த பெண்மணியை விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
 
அந்த 16 வயது பெண்ணை அடித்தவர் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்கானா ஆவார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தமிழகம் வந்து இங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அத்தோடு வங்கதேசத்தை சேர்ந்த அந்த 16 வயது பெண்ணின் வறுமையை போக்க வேலை வாங்கி தருகிறேன் என கூறி முஸ்கானா அந்த பெண்ணை வேலூருக்கு கூட்டி வந்துள்ளார்.
 
பின் அந்த சிறுமியை விபச்சாரத்திற்கு தள்ள முயற்சித்துள்ளார். இதனால் சிறுமி தப்பி ஓடியுள்ளார். அப்போது தான் ரோட்டில் வைத்து சிறுமியை பிடித்த முஸ்கானா, அவரை கடுமையாக தாக்கியபோது போலீஸில் மாட்டிக்கொண்டார். 
 
இதையடுத்து போலீஸார் முஸ்கானாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments