Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசத்திற்கு அடிமையான கணவன்: கணவனை பழிதீர்க்க மனைவி செய்த வெறிச்செயல்

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (14:30 IST)
சென்னையில் கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெண் ஒருவர் தனது 20 நாள் குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. 
 
இந்நிலையில் சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது செலஸ்டினுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கிடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. சத்யராஜ் மீது ஆத்திரத்தில் இருந்த செலஸ்டின் அந்த பிஞ்சுக் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்தார்.
 
பின்னர் குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டது என கதையளந்தார். 
 
இதுசம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். இவர்களுக்குள் நடைபெற்ற இந்த பிரச்சனையில் அந்த பிஞ்சுக் குழந்தை என்ன செய்தது? இவர்கள் மாதிரியான ஆட்கள் எப்போது திருந்தப் போகிறார்கள்?

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments