Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிக்க பணம் தராததால் 3 வயது குழந்தையைக் கொன்ற தந்தை

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (13:24 IST)
நாகையில் குடிக்க பணம் தராததால் தந்தை செய்த வேலையில் அவரது 3 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அந்தகத்துறையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. ரமேஷுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பதற்கு பணம் இல்லையென்றால் மனைவியிடம் சண்டையிட்டு பணத்தை வாங்கிச் செல்வான்.
 
அவ்வாறு நேற்றும் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளான். தன்னிடம் பணமில்லை என அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த பீரோவை கீழே தள்ளியுள்ளான். இதில் கீழே இருந்த அவனது குழந்தை பாரம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments