Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறாவயல் மஞ்சுவிரட்டு.. காளை முட்டி 10 வயது சிறுவன் பரிதாப பலி!

Prasanth Karthick
புதன், 17 ஜனவரி 2024 (13:53 IST)
பொங்கலையொட்டி சிறாவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் 10 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தை பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக கிராமப்பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாலமேடு, அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போல மஞ்சு விரட்டு போட்டிகளும் சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும்.

ALSO READ: நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் போற்றுவோம் - அமைச்சர் உதயநிதி

ஆனால் ஜல்லிக்கட்டை போல அல்லாமல் திறந்தவெளியில் நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் ஆபத்தும் உள்ளது. இன்று சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடந்து வரும் நிலையில் மஞ்சு விரட்டில் சீறி வந்த காளை ஒன்று 10 வயது சிறுவனை முட்டி தூக்கியதில் அந்த சிறுவன் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

அதை தொடர்ந்து பெயர் தெரியாத மற்றொரு இளைஞரும் காளை மாடு தாக்கியதில் பலியாகியுள்ளார். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் காயம்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனில் அம்பானி வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை.. என்ன காரணம்?

சோனியா காந்தி தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம்.. ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

பனையூர் பார்ட்டிகள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்?! - அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை.. அமைச்சர் துரைமுருகன் தகவல்..!

இல்லாத நாடுகளின் பெயரில் போலி தூதரகம்.. ஒருவர் கைது. ரூ.44 லட்சம் ரொக்கம் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments