Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9ஆம் வகுப்பு மாணவனிடம் பள்ளி கட்டணத்தை திருடிய மர்ம நபர்

9ஆம் வகுப்பு மாணவனிடம் பள்ளி கட்டணத்தை திருடிய மர்ம நபர்
, புதன், 8 ஜூன் 2016 (14:42 IST)
வங்கியில் பள்ளி கட்டணம் செலுத்த சென்ற மாணவனிடம் வங்கி அதிகாரி போல் நடித்து மர்மநபர் ஒருவர் ரூ:12,500 பணம் திருடியுள்ளார்.


 


சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சுதர்சன் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதர்சன் பள்ளி கட்டணம் செலுத்த தன் தந்தையிடம் ரூபாய் 12,500ஐ வாங்கிக் கொண்டு வங்கிக்கு சென்றார்.

வங்கியில் மர்ம நபர் ஒருவர் தான் வங்கி அதிகாரி என்றும், பணத்தை கணக்கில் செலுத்த தன்னிடம் தரும்படி கூறியுள்ளார். சுதர்சனும் வங்கி அதிகாரி என்று நினைத்து அந்த நபரிடம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார்.

சுதர்சன் சிறிது நேரத்திற்கு பிறகு தான் ஏமாந்து போனதை உணர்ந்துள்ளான். உடனே வீட்டுக்கு சென்று தந்தையிடம் நடந்த நிகழ்வை கூறியுள்ளான். திருட்டு குறித்து பெருமாள் காவல்துறையில் புகார் அளித்தார்.

பெருமாளின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் திருடிய நபரை அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனியா காந்தி மீது புதிய வழக்கு பதிவு