Webdunia - Bharat's app for daily news and videos

Install App

99 பேர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை: டி.என்.பி.எஸ்.சி அதிரடி

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:38 IST)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த 99 பேர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 40 பேர் தரப்பட்டியலில் வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்ய சிபிசிஐடி களமிறங்கியது. இந்த விசாரணையில் தேர்வு எழுதிய சிலர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் துணையுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிய வந்தது
 
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரகர்கள் ஆலோசனையின் பேரில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர் என்பது தெரிய வந்ததால் இதுகுறித்து விசாரணை செய்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு புகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான தேர்வர்கள் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும்,  இந்த 99 பேரும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறைகேட்டில் ஈடுபட்டு தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 39 தேர்வர்கள் வந்துள்ளதாவும், இவர்களுக்கு பதில் வேறு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments