மீண்டும் கூவத்தூர்; 98 எம்எல்ஏக்கள் ஓபிஎஸுக்கு ஆதரவு!

மீண்டும் கூவத்தூர்; 98 எம்எல்ஏக்கள் ஓபிஎஸுக்கு ஆதரவு!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (09:22 IST)
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்து எடப்பாடி பழனிச்சமியை முதல்வராக்கினார் சசிகலா.


 
 
ஆனாலும் ஓபிஎஸ் அணிக்கு 11 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெரும் அணி கட்சியை கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
 
இதனையடுத்து ஆர்கே நகரில் தினகரனை விட ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கள தகவல்கள் வருகின்றன. இதனை வைத்து தினகரன் அணியில் உள்ள பல எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு வர இருப்பதாக இப்போதே பேச ஆர்ம்பித்து விட்டார்கள்.
 
இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓபிஎஸ் அணியின் கே.சி. பழனிச்சாமி அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூர் நிகழ்வை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் சந்திக்கும். அப்போது ஓபிஎஸ் அணிக்கு 98 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருவார்கள். மேலும் திமுகவில் உள்ள அதிமுகவின் மாஜிக்கள் கூட வருவார்கள் என கே.சி.பழனிச்சாமி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற நமல் ராஜபக்ச வாழ்த்து

செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.. கட்சியில் இருந்து நீக்கிய இபிஎஸ்..!

விஜயகாந்த் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு.. நேரில் மரியாதை செலுத்திய ஈபிஎஸ்..!

திட்டமிட்டபடி ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு..!

ஒரே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா அழைப்பு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments