ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தான் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஓ.பி.எஸ் பெயரில் உள்ள அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. முதல்வரின் இந்த கேள்விக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
இதற்கு முதல்வராக தொடர வேண்டும் என்று 95 சதவீதம் பேரும், நீடிக்க வேண்டாம் என்று 5 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் பன்னீர் செல்வத்திற்கு உள்ள ஆதரவு மேலும் பெருகியுள்ளது.