Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.93.57லட்சம் ரொக்கம்,1.9 கிலோ தங்கம்,3.4கிலோ வெள்ளி.கடந்த 12 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை!

J.Durai
புதன், 21 ஆகஸ்ட் 2024 (13:05 IST)
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் 
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்  உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
 
அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள்,  வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர்  எண்ணினர். 
 
அப்போது கடந்த 12 நாட்களில் கோயில்  உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை   எண்ணியதில்  93 லட்சத்து,57 ஆயிரத்து,414  ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 990 கிராம் தங்கமும், 3 கிலோ 475 கிராம்  வெள்ளியும், 217 அயல்நாட்டு நோட்டுகளும், 1011 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றது.
 
அதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 521 ரூபாய் ரொக்கமும்,உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் ரூ. 12,805  ரொக்கமும்,போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5,772 ரொக்கமும் கிடைக்கப் பெற்றன  என கோயிலின் இணை ஆணையர்  பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments