Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சல்...

Webdunia
ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:30 IST)
கரூரில் டெங்கு காய்ச்சலால் 9 வயது சிறுமி உயிரிழப்பு – வேகமாக பரவிவரும் காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேர்க்கொள்ள வேண்டும் என் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

கரூர் ஏமூர் காலனியை சேர்ந்த கோபி உஷா தம்பதயினரின் மூத்த மகள்  வைஷ்ணவி வயது 9, அதே பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த வாரம்  தொடர் காய்ச்சலால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அச்சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் .அங்கு சிகிச்சை பலனின்றி வைஷ்ணவி உயிரிழந்துள்ளார். கரூர் பாலம்மாபுரத்தில் உள்ள மின்மயானத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காதது உயிரிழப்புக்கு காரணம் என  பெற்றோர் கூறுகின்றனர். மேலும் கரூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கரூர் ஏமூர் புதூர் காலனியில் சிறுமி வைஷ்ணவி உயிரிழந்த சம்பவம் எதிரொலி காரணமாக தற்போது சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் திடீர் முகாம் அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments