வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (18:09 IST)
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனை அடுத்து புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதை அடுத்து நாளை காலை ஒடிசா மாநிலம் பூரி என்ற பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தமிழகத்தில் உள்ள சில துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கடலூர், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments