Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான 9 கொரோனா நோயாளிகள்… ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (08:03 IST)
ராமேஸ்வரத்தில் இருந்த 9 கொரோனா நோயாளிகள் மாயமாகி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 82 போலிஸாரை பிடித்து அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொண்டனர். அந்த 82 பேரிடமும் செல்போன் எண் மற்றும் முகவரி வாங்கி அனுப்பியுள்ளனர். கொரோனா சோதனை முடிவுகள் வந்த வுடன் அதில் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்ததால் அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் 9 பேர் தவறான செல்போன் எண் மற்றும் முகவரி கொடுத்துள்ளனர். இதனால் அவர்களை ட்ராக் செய்வது கடினமாகியுள்ளது. அந்த 9 பேர் கொரோனா தொற்றோடு இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments