Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிமனை இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (10:39 IST)
பொறையாரில் பணிமனை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நாகை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனைக் கட்டிடம் உள்ளது. அங்கு சில ஊழியர்கள் நேற்று இரவு ஓய்வு எடுத்து வந்தனர். அந்நிலையில், நேற்று நள்ளிரவு அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரெனெ இடிந்து விழுந்தது. அதில், போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கட்டிட இடுபாடுகளில் 20க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்தனர். 
 
அதன்பின் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்ற போக்குவரத்து ஊழியர் தற்போது மரணமடைந்தார். இதனால், பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 
 
இடிந்து விழுந்த பணிமனை கட்டிடம் 70 வருடங்கள் பழைமையானது. அந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
 
இந்த சம்பவம் அந்த பகுதி போக்குவரத்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments