Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 100க்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு.. பொதுமக்கள் நிம்மதி..!

Webdunia
புதன், 10 மே 2023 (07:46 IST)
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500க்கு மேல் இருந்த நிலையில் தற்போது அது 100க்குள் கட்டுக்குள் வந்துள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தன. இதன் பயனாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 86 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் 13 பேருக்கும் கன்னியாகுமரியில் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணிகள் மூன்று பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 251 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 869 என்றும் கூறப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்றால் நேற்று கோவையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments