Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:47 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். 
 
இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை இன்று முடிவடைந்த நிலையில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடக்கும் அதிகாரி தெரிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டிய நிலை இருப்பதால் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கின்படி 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments