Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு 750 கோடி ரூபாய் வழங்கப்படும்; தமிழக முதல்வர்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (12:23 IST)
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்கிறது. சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி பொங்கலுக்கு முன்பாக ஓய்வூதியதாரர்களுக்கு 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளார் 
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோர் பலமுறை எச்சரித்தும் போராட்டத்தை ஊழியர்கள் கைவிடவில்லை. தங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு தரப்பில் பேசவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு தரப்போ அதை ஏற்க மறுத்து வருகிறது. தற்காலிக ஓட்டுனர்கள் ஆங்காங்கே விபத்துகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போராட்டம் கைவிடப்படாததால் பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் நபர்களுக்காக தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவிற்கு தமிழக அரசு வந்திருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.
 
இதனையடுத்து சட்டசபையில் இன்று பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலுக்கு முன்பாக 750 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். எனவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தைதை விட்டு விட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments