Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவு

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2014 (21:36 IST)
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 
பாராளுமன்ற தேர்தல் இன்று 6-வது கட்டமாக தமிழ் நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள்   மற்றும் யூனியன்  பிரதேசங்களில் நடந்து முடிந்துள்ளது.  மொத்தம் 117 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
 
இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்களிப்பதற்காக காலை 6.45 மணி முதலே மக்கள் வாக்கு சாவடிகளுக்கு வர தொடங்கி விட்டார்கள்.
 
7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும்  பெரும்பாலான  ஓட்டு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டளித்தனர்.
 
தமிழகம் முழுவதும் 9 மணி நிலவரப்படி 14.31 சதவீத வாக்குபதிவும்  11 மணி நிலவரப்படி 35.28 சதவீத வாக்குப்பதிவும் நடநது இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
 
இந்நிலையில், மாலை 6 மணியுடன் நடந்து முடிந்த தமிழக அளவிலான வாக்கு பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
 
இதேபோன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு 62 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments