Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (17:21 IST)
நாமக்கல் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்டுள்ளார்.


 

 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமாயி(70) சமத்துவபுரத்தில் உள்ள தன் அண்ணன் ராமசாமியுடன் வசிந்து வந்தார். நேற்று காலை ராமாயின் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்தபோது உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். 
 
தன்னை அடையாளம் தெரியாத சிலர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கூறி மயங்கியுள்ளார். மயக்கமடைந்த அவரை அப்பகுதி மக்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய நெடுஞ்சாலைகள்.... நாம் அறியாதவை