Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் முன் 7 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: மதுரையில் பரபரப்பு

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (10:01 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஓரிரண்டு தீக்குளிப்பு சம்பவங்களும் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய  செய்துள்ளது.
 
இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயகுமார் முன்பாக சற்றுமுன்னர் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயற்சி செய்த பெண்களின் அருகில் இருந்தவர்களும் காவல்துறை அதிகாரிகளும் தடுத்து அவர்களுக்கு சமாதானம் கூறினர். அப்போது மேலும் 3 பெண்கள் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
 
தங்களது பிள்ளைகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும், அதனால் மனம் வெதும்பி தீக்க்குளிக்க முடிவு செய்ததாகவும், அந்த 7  பெண்களும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். 7 பெண்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள்னா.ர்
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments