காவிரி ஆற்றில் குளித்த போது அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையத்தில் உள்ள பவானி கட்டளை கதவணை நீர்மின்நிலையத்தினை அடுத்துள்ள காவிரி ஆற்றில் ஈரோடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த 9 பேர் காவிரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் விடுமுறையை கழிக்கச் சென்றனர்.
அப்போது பவானி கட்டளை கதவணை நீர்மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் அடித்துச் செல்லப்பட்டு 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ 1 லட்சம் முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.