Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 20 மே 2025 (11:30 IST)

கடந்த 2020ம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா பிற நாடுகளிலும் அதிகம் பரவலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று 93 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 257 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 66 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments