Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வாகன ஓட்டுநர்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வாகன ஓட்டுநர்
, செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (11:28 IST)
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி வாகன ஓட்டுநர் ஒருவர் 6 வயது சிறுமிக்கு, பள்ளி வாகனத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகிலுள்ள பெருந்தொழுவை சேர்ந்தவர் 42 வயதுடைய ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
 
இவர் அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளி வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி ஒருவரை மிரட்டி, வேனுக்குள் அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
 
அமலும், இதை வெளியில் சொன்னால் அடித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
 
இந்நிலையில், தூங்கும்போது, திடீரென பயந்து சத்திமிட்டுள்ளார். இதைக் கண்டு பயந்துபோன பெற்றோர் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, பள்ளி வாகன ஓட்டுநர் ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய், அவினாசிபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த காவல்துறையினர், வேன் ஓட்டுநர் ஆறுமுகத்தை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil