Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை - எங்கெங்கு தெரியுமா?

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை - எங்கெங்கு தெரியுமா?
, வியாழன், 26 மே 2022 (12:10 IST)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். 

 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்தது.
 
தற்போது 28 ஆம் தேதியுடன் அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 
அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
 
ஆனால் தற்போது வெளியான அறிக்கையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானப் படையின் முதல் பெண் போர் விமானி! – பாராட்டு மழையில் அபிலாஷா பாரக்!