Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி அலைக்கற்றை நடைமுறை: அரசு துரிதம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:20 IST)
ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை மாநாடு   இன்று  நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  5ஜி அலைக்கற்றை நடைமுறைக்கு அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
சமீபத்தில் திமுக அரசு 2024-2025 அம ஆண்டிற்காக பொதுபட்ஜெட் தாக்கல் செய்தது. இதையடுத்து வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று, ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை மாநாடு  நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  5ஜி அலைக்கற்றை நடைமுறைக்கு அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஐ.டி துறை தொடர்பான பல கொள்கைகளை உருவாக்கியுள்ளோம்.டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் உலக மனிதவள தலைநகரமாக தமிழ் நாட்டை மாற்றுவதே என் கனவு. ஐ.டி துறை வளர்ச்சி அடைவது நம் கண் முன்னே தெரிகிறது.
 
ஆங்கிலம் அல்லாத மொழியில் முதல் தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ளது தமிழ் நாடு.5 ஜி அலைக்கற்றை நடைமுறைகளை தமிழ்நாடு  துரிதப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

மருமகனோடு மாமியார் கள்ளக்காதல்! தடுக்க முயன்ற மகள் மீது கொலை முயற்சி! - ஆந்திராவில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments