Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கில் தடையை மீறி சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (11:25 IST)
சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 
சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்காக 10,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டனர். சென்னையில் 449 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வருபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். 
 
ஊரடங்கு சமயத்தில் ,பெட்ரோல் பங்க்கள், பால் விநியோகம், பத்திரிக்கை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்ல வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னையில் இரவு நேர ஊரடங்கில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 501 இருசக்கர வாகனங்கள், 32 ஆட்ரோக்கள், 14 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments