Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை வியாபாரியிடம் 52 கிலோ வெள்ளியை அபேஷ் செய்த போலி போலீஸார்

Webdunia
புதன், 25 நவம்பர் 2015 (17:42 IST)
மதுரை அருகே போலீசார் போல் நடித்து நகை வியாபாரியிடம் 52 கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சேலத்தை சேர்ந்த நகை வியாபாரி கோவிந்தராஜ், 52 கிலோ வெள்ளியை எடுத்துக் கொண்டு தனது மகன் மற்றும் கடை ஊழியருடன் மதுரையில் இருந்து சேலத்திற்கு தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.
 
அப்போது வாடிப்பட்டி அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் கோவிந்தராஜின் காரை தடுத்து நிறுத்தி காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களை மிரட்டியுள்ளனர். பின்னர் நீங்கள் வைத்திருப்பது கடத்தல் வெள்ளியா? என்று விசாரிப்பது போல் அவர்களை மிரட்டி 52 கிலோ வெள்ளியை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் அவர்களை 
இறக்கிவிட்டு காரில் வெள்ளியை கடத்திச் சென்றுள்ளதாக நகை வியாபாரி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கோவிந்தராஜ் வாடிப்பட்டி போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments