Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: மதுரை சிறையில் உள்ள 51 கைதிகளுக்கு ஜாமீன்

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (19:38 IST)
கொரோனா எதிரொலி: 51 கைதிகளுக்கு ஜாமீன்
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 250 பேருக்கு மேல் பரவி இருந்தாலும், தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர்கள் மட்டுமே என்பதும் அதில் மூன்று பேர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி அவர்களே பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக சிறிய வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 74 பேர்களில் 51 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் 
 
12 மாவட்ட நீதிபதிகள் நேரில் விசாரணை செய்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக ஒரே இடத்தில் அதிக நபர்களை குவிக்க கூடாது என்பதன் அடிப்படையாக சிறை அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்போது 51 கைதிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments