Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (19:07 IST)
கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கவில்லை என்பதும் இதனை அடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் 9-ஆம் வகுப்புக்கும் 11ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நடப்பு கல்வியாண்டில் பாடங்களை முழுவதுமாக நடத்துவதற்கு போதுமான அவகாசம் இல்லாத காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 50% சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments