மெட்ரோ ரயில் டிக்கெட் மீது 50% ஆஃபர்!!

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (13:21 IST)
பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலான மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.  
 
அதேபோல காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து முதல் 9 மணி வரையில் அனைத்து வழிதடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மெட்ரோ ரயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் மெட்ரே ரயில் பயணத்திற்கு 50 சதவிகித கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல மொபைல் அப்ளிகேஷன் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 20 சதவிகித கட்டண சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments