50 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு தாவ உள்ளனர்: ஸ்டாலினுக்கு தெரியாம பாத்துக்கோங்க!
50 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு தாவ உள்ளனர்: ஸ்டாலினுக்கு தெரியாம பாத்துக்கோங்க!
தமிழக சட்டசபையில் கடந்த 18-ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்காததால் சட்டசபை கடும் அமளிக்குள்ளானது. மேஜை உடைப்பு, மைக் உடைப்பு, சட்டை கிழிப்பு என சட்டசபை சண்டைக்களமானது. இதனையடுத்து சபாநாயகர் திமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது, அவரது அரசு கவிழ்ந்திருக்கும் என திமுக, ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் கூறினர். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் 45 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராக வந்திருந்தனர். இது ஸ்டாலினுக்கு கூட தெரியாது. ரகசிய வாக்கொடுப்பு நடத்தியிருந்தால் அத்தோடு திமுக காணாமல் போய் இருக்கும்.
பணம் கொடுத்து அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் துடிக்கிறார். ஸ்டாலினின் இந்த கனவு பலிக்காது. திமுக எம்எல்ஏக்கள் 89 பேரில் 50 பேர் அதிமுகவிற்கு வரத் தயாராக உள்ளனர் என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.