Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (12:54 IST)
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவு காரணமாக பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளிடம் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments