Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஆடுகளை அடித்து விட்டு அசால்ட் நடைபோடும் சிறுத்தை! – மதுரை கிராம மக்கள் அச்சம்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:02 IST)
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் - 4 பேரின் 5 ஆடுகளை கடித்து தின்றதால் பொதுமக்கள் அச்சம். சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை கிராமத்தில் உலா வந்தோடு, அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிரமணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சிறுத்தையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments