5 ஆடுகளை அடித்து விட்டு அசால்ட் நடைபோடும் சிறுத்தை! – மதுரை கிராம மக்கள் அச்சம்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (11:02 IST)
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் - 4 பேரின் 5 ஆடுகளை கடித்து தின்றதால் பொதுமக்கள் அச்சம். சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.மேலப்பட்டி கிராமம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்திற்குள் நேற்று இரவு வந்த சிறுத்தை கிராமத்தில் உலா வந்தோடு, அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம், சுப்பிரமணி, சுந்தரம் மற்றும் ரவி என்பவர்களின் 5 ஆடுகளை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கிராமத்தில் சிறுத்தை உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வதற்காக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சிறுத்தையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கைகள் எடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments