Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரிக்கடலில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மாயம்: தேடும் பணியில் கடலோர காவல்படை!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:42 IST)
குமரி கடலில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என்று கூறப்படுகிறது 
 
இது குறித்த தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர் என்றும் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலைதான் உள்ளது என்றும் கூறப்படுகிறது
 
மூன்று நாட்களுக்கு முன்னர் கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் திடீரென மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments